வடமத்திய மகாணத்திலுள்ள சில பின்தங்கிய கிராமங்களில் சிறு வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதி மக்களுக்கு போதியளவு கல்வி வளர்ச்சி இன்மையே இதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அரலகங்வில, மெதிரிகிரிய, ஹொரவபொத்தான, மஹவிலச்சிய, மீகஸ்வௌ, வெலிகந்த போன்ற பகுதியில் உள்ள குடியேற்றப் பகுதி விவசாயக் குடும்பங்களில் 14 மற்றும் 15 வயதுகளில் சிறு வயது திருமணங்கள் பரவலாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது வயது பற்றியோ அரச சட்டம் பற்றியோ போதியளவு விளக்கமின்மை இதற்கு முக்கிய கரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைகாலங்களில் அதிகளவு சிறு வயதுத் திருமணங்கள் இப்பகுதிகளில் நடந்துள்ளமை பற்றித் தெரிய வந்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில் அதிகரித்துள்ள 14 மற்றும் 15வயது சிறு வயது திருமணம்
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
10:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment