சிரியாவில் அதிபர் பசர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பல இடங்களில் நடந்த போராட்டத்தில் மொத்தம் 16 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
சிரியா கலவரத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஜிசர் அல்சுகர் என்ற சர்க்கரை ஆலையில் அடைத்து வைத்து ராணுவத்தினர் சித்ரவதை செய்து கொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் கலவரம் தொடர்ந்து நடப்பதால் ஏராளமானோர் அண்டை நாடான துருக்கிக்கு அகதிகளாக செல்கின்றனர்.
சிரியாவில் கலவரம்: 16 பேர் சுட்டுக் கொலை
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment