உலக சீரிஸ் ஹொக்கி போட்டிகள் வரும் டிசம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 22 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்திய ஹொக்கி சம்மேளனம் (ஐ.எச்.எப்.), நிம்பஸ் ஸ்போர்ட் ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டி டெல்லி, மும்பை, பஞ்சாப், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்தியா மட்டுமின்றி, அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பாகிஸ்தான், ஜேர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 176 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். 61 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது 8 அணிகளின் கப்டன்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவின் முன்னணி வீரர்களான சர்தார் சிங், அட்ரியான் டிசெளசா, அர்ஜுன் ஹாலப்பா, பிரப்ஜோத் சிங், அவுஸ்திரேலியாவின் பிரென்ட் லிவர்மோர், பாகிஸ்தானின் ரேஹன் பட், ஸ்பெயினின் முன்னாள் கப்டன் ரோட்ரிகோ கார்ஸா, அர்ஜென்டினாவின் லூகாஸ் வில்லா ஆகியோர் கப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அரையிறுதி ஆட்டங்களும், 3 இறுதி ஆட்டங்களும் நடைபெறுகின்றன. மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெறும் அணி கோப்பையைக் கைப்பற்றும்.
இந்தியாவில் உலக ஹொக்கி சீரிஸ்: டிசம்பர் 22 ம் திகதி முதல் தொடக்கம்
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment