எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் பெயர் மாற்றம்: விஷால் பேட்டி

Friday, July 22, 2011


நடிகர் விஷால் பிரபாகரன் என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
படத்துக்கு பிரபாகரன் பெயர் வைக்க எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து அந்த தலைப்பு மாற்றப்படுவதாக விஷால் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் விஷால் கூறியதாவது: பிரபாகரன் படத்தில் நான் உதவி கொமிஷனர் வேடத்தில் வருகிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர் பிரபாகரன். அதையே தலைப்பாக்க நினைத்தோம்.
அது சர்ச்சையாகி இருப்பதால் ரசிகர்கள் மனநிலை, வியாபாரம், மக்கள் உணர்வுகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு வேறு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அவன் இவன் படம் வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. இப்படத்தில் ஒன்றரைக்கண் வைத்து கஷ்டப்பட்டு நடித்தேன். கண்களில் வலி இருந்தது.
பாலாவிடம் சொன்னால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவார் என பயந்து சிரமங்களை பொறுத்துக் கொண்டு நடித்தேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒன்றரைக்கண் வைத்து யாரும் இதுவரை நடித்தது இல்லை. எனவே கின்னஸ் சாதனைக்கு இப்படத்தை அனுப்ப முயற்சி நடக்கிறது.
இயக்குனர் பாலா கதாநாயகர்களை அடிமை போல் நடத்துவார் என்றும், படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை சொல்ல மாட்டார் என்றும் பேசப்படுவதில் உண்மை இல்லை.
என்னிடம் முழு கதையும் சொன்னார். அவர் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகருக்கும் விருப்பம் உள்ளது. நானே அவரிடம் நீங்கள் வெளியில் அதிகம் பேசாததால் சைக்கோ என்கிறார்கள்.
எனவே எல்லோரிடமும் சகஜமாக பேசுங்கள் என்று சொல்லி ஒரு கூட்டத்தில் வலுக்கட்டாயமாக இழுத்து போய் உட்கார வைத்தேன்.
தனது உழைப்பு, திறமையை தியாகம் செய்து எனக்கு அவன் இவன் படத்தில் பெயர் கிடைக்கச் செய்துள்ளார். தேசிய விருது பெறுவதில் விக்ரமுக்கும் எனக்கும் போட்டி இருக்கும் என்று கூற முடியாது. ஜூலை மாதம் தான் ஆகியுள்ளது. இன்னும் பல படங்கள் வெளியாக உள்ளன. அவன் இவன் படத்துக்கு விருது கிடைத்தால் மகிழ்ச்சி.

0 comments:

IP
Blogger Widgets