கனடா மற்றம் அமெரிக்காவை இணைக்கும் எல்லை பகுதியில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த எல்லை பகுதியில் தாராள போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்கர்கள் எடுத்து வரும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் குறித்து பாதுகாவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவிற்கு வரும் அமெரிக்கர்கள் தாங்கள் எடுத்து வரும் துப்பாக்கி விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் உரிய அனுமதியையும் பெற்று இருக்க வேண்டும என கனடா காவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் குண்டுகள் நிரப்பப்பட்ட 10 துப்பாக்கிகளை காவலர்கள் கைப்பற்றினர். கனடா எல்லை சேவை முகமை தற்போது வெளியிட்டு உள்ள வரையறை அறிக்கையில் கொண்டு வரும் ஆயுதங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத ஆயுதங்களை எல்லை பாதுகாவலர்கள் பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
எல்லைப் பகுதியில் துப்பாக்கிகளுடன் அமெரிக்கர்கள்: பாதுகாவலர்கள் எச்சரிக்கை
Friday, July 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment