சோப்பு நுரை மூலம் பபிள் விட்டு சாதனை படைக்கும் சாம்சம், தனது 7வது கின்னஸ் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.
சோப்பு நுரையை கொண்டு பபிள் விடுவது குழந்தைகளின் பொழுதுபோக்கு. ஆனால் இதனை தொழிலாகவே செய்து வெற்றியும் பெற்று சாதனை படைத்து வருகிறார் சாம்சம் என்ற சாம் ஹீத்(39). 22 வருடங்களாக இந்த தொழிலை செய்து வரும் சாம்சம் இந்த முறையும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்துள்ளார்.
பெரிய பபிள் அதற்குள் சிறியதாய் ஏராளமான பபிள்கள் என இந்த முறையும் சாதனையுடன் புதுமையும் படைத்துள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல பெரிய பபிளுக்குள் 56 சிறிய பபிள்கள்.
கடந்த 2006ம் ஆண்டு 49 பபிள்கள் என்று இருந்த இவரது சாதனை தற்போது இவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாம் கூறியதாவது: வித்தியாசமாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பது எனது ஆசை. பபிள் விடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. இதிலேயே சாதனை படைக்கலாம் என்ற யோசனை தோன்றியது.
தொடர்ந்து பயிற்சி செய்தேன். எனக்கு பலமுறை வெற்றியும் கிட்டி உள்ளது. பபிள் விட தயாரிக்கப்படும் கலவை தான் இதில் மிகவும் முக்கியம். காற்றின் திசையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பபிள் விடவேண்டும்.
இக்கலையை பயிற்றுவிக்கவும் மேம்படுத்தவும் தனியாக பப்ளிங்க் என்ற நிறுவனம் ஒன்றைத் துவங்கினேன். இதில் தயாராகும் கலவைகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு தனிமனிதர்களும் இதில் சாதனையாளர்களாக முடியும்.
இதில் சாதனை படைக்க பயிற்சி மட்டுமே தேவை. இத்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சோப்பு கலவையின் ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேன்.
பபிள் விட்டு சாதனை படைத்த நபர்(படங்கள் இணைப்பு)
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
9:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment