ஆராய்ச்சிக்காக அளிக்கப்பட்ட நிதியை மனைவிகளுக்கு வழங்கிய சீன விஞ்ஞானி கைது

Sunday, July 24, 2011

ஆராய்ச்சிக்காக அளிக்கப்பட்ட நிதியை தன் இரு மனைவியருக்கு வாரி வழங்கிய சீன நிலவியல் விஞ்ஞானி கைது செய்யப்பட்டார்.
சீனாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிப்பவர் டுவான் ஷென்ஹாவோ(52). இவர் சீனப் பல்கலைக்கழகத்தில் நிலவியலுக்கான உயர்படிப்பை முடித்தார். கடந்த 1988ல் இருந்து அமெரிக்காவில் வசிக்கிறார்.

கடந்த 2002லிருந்து கலிபோர்னியா பல்கலையில் சீன அறிவியல் அகாடமியில்(சி.ஏ.எஸ்) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஒரு மனைவியும் வழக்கறிஞருமான காவோ ஷியா தன் கணவர் ஆறு கோடியே 75 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாகப் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில்,"ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட பணத்தை ஷென்ஹாவோ தன் வேறு இரு மனைவிகளுக்கு வாரி வழங்கியுள்ளார். அவர்களுக்கு ஆடம்பர பங்களாக்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்" என ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
ஷியாவின் புகாரின்படி டுவான் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் மனைவியால் சுட்டிக் காட்டப்பட்ட பெண்கள் தன் மாணவிகள் எனவும், மனைவிகள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சி.ஏ.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"டுவானின் மோசடி விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான நிறுவனங்களின் பெயரைக் கெடுத்து விட்டது" என்று குறிப்பிட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets