ஜேர்மனியில் பிடிபட்ட தாய்லாந்து இளவரசர் விமானத்தை நீதிமன்றம் விடுவித்தது

Friday, July 22, 2011

தாய்லாந்து இளவரசருக்கு சொந்தமான விமானத்தை விடுவிக்க ஜேர்மனி நீதிமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

2 கோடி யூரோ வங்கி உத்தரவாதம் அளித்தால் விமானத்தை விடுவிக்கலாம் என லேன்ட் ஷட் கோர்ட் கூறியது. தாய்லாந்து அரசிற்கும், ஜேர்மனி கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே உள்ள வர்த்தக பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து இளவரசர் விமானம் கடந்த வாரம் மூனிச் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட விமானம் தாய்லாந்து இளவரசருக்கு சொந்தமானது ஆகும். இந்த விமானம் தாய்லாந்து அரசுக்கு உரியது அல்ல. தனி நபரான இளவரசருக்கு சொந்தமானது. எனவே அந்த விமானத்தை பறிமுதல் செய்ய வேண்டாம் என நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இந்த விமான பறிமுதல் நடவடிக்கையால் ஜேர்மனி மற்றும் தாய்லாந்து இடையே உறவில் விரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் காசித் பெர்லின் வந்தார். அப்போது அவர் ஜேர்மனி வெளியுறவு துறை மூத்த அமைச்சக அதிகாரி கார்னெலியாவை சந்தித்தார். அப்போது விமான பறிமுதல் நடவடிக்கை மிகப்பெரும் தவறு என குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு ஜேர்மனி வால்டர் பா கட்டுமான நிறுவனத்திற்கும் தாய்லாந்து அரசுக்கும் இடையே 26 கிலோ மீற்றர் சாலை கட்டுமான பணியில் பிரச்சனை ஏற்பட்டது. சுங்க வரி நிர்ணயம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இது தொடர்பாக 3 கோடி யூரோ நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என ஜேர்மனி நிறுவனம் போராடி வருகிறது. அதன் அடிப்படையில் தாய்லாந்து இளவரசர் விமானத்தை பண மீட்பு நடவடிக்கை குழுவினர் மூனிச்சில் பறிமுதல் செய்தனர்.

0 comments:

IP
Blogger Widgets