சீனாவில் 100 கோடி டொலர் கடத்தல் சதியில் முக்கிய நபராக கருதப்பட்ட நபரை அவரது நாட்டுக்கு கனடா அனுப்பியது.
சீனாவை சேர்ந்தவர் லாய் சாங்சிங்க். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சீன அரசின் பிடியில் இருந்து தப்பி கனடா வந்தார். 1999ஆம் ஆண்டு கடனாவில் அவர் அகதியாக வர அனுமதி கேட்டார்.
தன்னை கனடாவை விட்டு வெளியேற்றக்கூடாது. அப்படி செய்தால் தமது உயிருக்கு அபாயம் ஏற்படும் என கனடா அரசிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் தனது சொந்த நாட்டில் சித்ரவதை செய்யப்படும் நிலையும் உள்ளது என கூறி வந்தார்.
தற்போது லாய் சாங்சிங்கிற்கு 52 வயது ஆகிறது. 12 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் அவர் நேற்று வான்கூவரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு லஞ்சம், கடத்தல் மற்றம் வரி ஏய்ப்பு ஆகிய கிரிமினல் குற்றங்களுக்காக விசாரணை செய்யப்படுகிறார்.
சாங்சிங் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து வராது என சீனா உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து லாய் சாங்சிங் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டார். சீனாவில் பணியாற்றிய முன்னாள் கனடா தூதர் ஹாவர்டு பாலோச் கூறுகையில்,"தற்போயை நடவடிக்கை மூலம் இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்" என தெரிவித்தார்.
சீன அரசால் தேடப்பட்டு வந்த குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பின்னர் கைது
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment