பெல்ஜியத்தின் பாதிப்பகுதியை பிரான்ஸ் ஏற்க வேண்டும்: தேசிய கட்சி தலைவர் மரினே வலியுறுத்தல்

Monday, July 25, 2011

 பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளை பிரான்ஸ் தனது புதிய பகுதியாக ஏற்க வேண்டும் என பிரான்சின் வலது சாரி கட்சியான தேசிய கட்சி தலைவர் மரினே லே பென் கூறினார்.

பெல்ஜியத்தில் டச்சு மொழி பேசும் மக்கள் வடக்கு பகுதியில் உள்ளனர். பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் தெற்கு பகுதியில் உள்ளனர். இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 400 நாட்களுக்கு மேல் எந்த ஒரு அரசாங்கமும் இல்லாமல் பெல்ஜியம் தவித்து வருகிறது.பெல்ஜியத்தின் தேசிய நாளின் போது மரினே அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில் பெல்ஜியத்தின் 50 சதவீதப் பகுதியை பிரான்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். பெல்ஜியம் இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால் பிரான்ஸ் தனது கரத்தை பிரான்சு மொழி பேசும் மக்கள் அல்லது வாலுன்களிடம் நீட்ட வேண்டும்.
தற்போதைய பெல்ஜியம் சூழ்நிலை யாருக்கும் மகிழ்ச்சியை தராது. பெல்ஜியம் நிலைப்பாட்டை பிரான்ஸ் கருத்தில் கொள்ள வேண்டும். பிரெஞ்சு மொழி பேசும் தெற்கு பகுதி பெல்ஜிய மக்களுக்கு பிரான்ஸ் உதவிக்கரம் நீட்டவேண்டும் என வலியுறுத்தினார்.
அந்த நிலைபாட்டில் இருந்து தவறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளின் பொது கருத்து வாக்கெடுப்புக்கு பின்னர் உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என மரினே தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets