பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் "லைவ்லீக்" என்ற இணையதளத்தில் நேற்று வீடியோ காட்சியை வெளியிட்டனர்.
அதில் பாகிஸ்தானை சேர்ந்த 16 பொலிசார் மலைப் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகள் பின்புறமாக மடக்கி வைத்து கட்டப்பட்டிருந்தது. அவர்களின் முகம் பீதியில் உறைந்திருந்தது.
இந்த நிலையில் முகத்தை துணியால் மறைத்தபடி 4 தலிபான் தீவிரவாதிகள் அவர்கள் முன்பு துப்பாக்கியுடன் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சுவாத் பள்ளத்தாக்கில் 6 அப்பாவி குழந்தைகளை கொன்றதாக குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது. அதற்கு தண்டனையாக அனைவரும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து அவர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்கின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த பொலிசார் அப்படியே மண்ணில் சாய்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.


அதில் 27 பொலிசாரும், 40 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 16 பொலிசாரை காணவில்லை.



0 comments:
Post a Comment