ஜேர்மனி அரசு கணணிகளில் தகவல்கள் திருட்டு போகும் அபாயம்

Wednesday, July 20, 2011

ஜேர்மனியின் அரச நிர்வாக கணணிகளில் தகவல்களை திருட அச்சுறுத்தல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சுங்க ஆணையக கணணி தகவல்களை திருடுவதற்கு உதவி செய்த 23 வயது இளைஞர் ஒருவரை ஜேர்மனி பொலிசார் கைது செய்தனர். அந்த நபர் குறிப்பிட்ட அரசு தகவல்களை கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
அந்த நபரின் அபார்ட்மென்ட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த இளைஞர் நீதிபதி முன்பாக திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது.
சுங்க இலாகா சேவையின் ஒரு முக்கிய பகுதியில் கணணி தகவல் திருடர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் பொலிஸ் உளவு செயல்பாட்டையும் தொந்தரவு செய்துள்ளனர். சந்தேகிக்கும் தீவிரவாதிகள் மற்றும் பெரும் குற்றவாளிகள் குறித்த விவரங்களில் கணணி தகவல் திருடர்கள் ஊடுருவி உள்ளனர்.
பல்வேறு தகவல் திருட்டுகள் ரஷ்ய கணணிகள் மூலமாக நடைபெற்று உள்ளன. ஜேர்மனி சுங்க இலாகாவின் சர்வர்களில் இருந்த பொலிஸ் தகவல்களை கணணி தகவல் திருடர்கள் திருட முயன்றுள்ளனர்.
கணணி தகவல்களை திருடுவதற்கு ஏதுவாக என்ன தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய அரசு தரப்பில் 10 சதவீத படைபிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தகவல்கள் திருடப்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அரசு அவசரமாக ஆலோசனை செய்து வருகிறது.

0 comments:

IP
Blogger Widgets