உலக நாடுகளில் அணு உலை பிரச்சனை கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் இ.டி.எப் நிறுவனம் தனது புதிய அணு உலை அமைப்பு பணியை 2 ஆண்டுகள் தாமதம் செய்துள்ளது.
வருகிற 2014ஆம் ஆண்டு துவங்க இருந்த புதிய அணு உலையை 2016ஆம் ஆண்டில் துவக்க திட்டமிட்டு உள்ளது. அணு உலைகயில் தீவிர பாதுகாப்பு பணிகள் குறித்து ஆராய்வதால் இந்த தாமதம் ஏற்பட்டு உள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி புகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் ஜப்பான் அணு மின் உலையில் அணு கதிர்வீச்சு பரவியது.
இதனால் உலக நாடுகள் அணு மின் திட்டம் குறித்து கடுமையாக விவாதித்து வருகின்றன. இந்த நிலையில் பிரான்சில் பெரும் அணு மின் உற்பத்தி நிறுவனமான இ.டி.எப் வெளியிட்ட அறிவிப்பில் மேற்கு பிரான்சில் 2 ஆண்டுகளில் துவங்க இருந்த அணு மின் நிலையம் 2016ஆம் ஆண்டு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக துவக்க பணி தாமதமாகி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. புதிய அணு மின் நிலையம் 500 கோடி டொலர் மதிப்பிற்கு பதிலாக 6 கோடி பில்லியன் டொலர் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
பிரான்சில் புதிய அணு மின் திட்டத்தில் தாமதம்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment