வான்கூவரில் 260 லட்சம் டொலர் கோகைன் போதை மருந்து கடத்தல்

Sunday, July 24, 2011

வான்கூவர் கடல் பகுதியில் 260 லட்சம் டொலர் கோகைன் போதை மருந்து கடத்தியது தொடர்பாக இரு நபர்கள் குற்றவாளி என விக்டோரியா நீதிமன்றம் அறிவித்தது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவை சேர்ந்தவர் ஸ்காட் பீட்டர்சன்(39) மற்றும் மெக்சிகோவை சேர்ந்த விசன்டே ஹெர்னான்டஸ் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
அவர்கள் 2010ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா சரித்திரத்தில் இல்லாத வகையில் ஆயிரம் கிலோ போதை மருந்தை கடத்தினர். அவர்கள் வான்கூவர் கடல் பகுதியில் 15 மீற்றர் நீள படகில் போதை மருந்தை கடத்திய போது பிடிபட்டனர்.
அந்த படகு ஹார்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த படகு மேற்கு கடலோர பகுதியான பனாமாவில் இருந்து வந்த போது பிடிபட்டது.
கனடாவின் பல்வேறு நகரங்களில் சப்ளை செய்வதற்காக அந்த போதை மருந்து கொண்டு வரப்பட்டது என பொலிசார் தெரிவித்தனர். போதை மருந்து கடத்திய குற்றவாளிகளுக்கு எத்தனை வருட சிறை தண்டனை என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் விக்டோரியா நீதிமன்றம் வருகிறார்கள்.

0 comments:

IP
Blogger Widgets