அகரம் பவுண்டேசன் என்ற கல்வி அறக்கட்டளை ஒன்றையும் நடத்திவரும் சூர்யாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகர் சிவக்குமார், லட்சுமி தம்பதியினருக்கு 1975-ல் பிறந்த இவர், சென்னையிலேயே பள்ளிப் படிப்பை முடித்து, லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
படித்து முடித்ததும் வசந்தின் இயக்கத்தில், 'நேருக்கு நேர்' என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு 'பெரியண்ணா', 'பிரெண்ட்ஸ்', 'நந்தா', 'மௌனம் பேசியதே', 'காக்க காக்க', 'பிதாமகன்', 'ஆயுத எழுத்து', 'கஜினி,' 'ஆறு', 'சில்லுன்னு ஒரு காதல்', 'வாரணம் ஆயிரம்', 'அயன்', 'சிங்கம்', 'ரத்தசரித்திரம்' என பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில் '7ஆம் அறிவு' படத்திலும், கே.வி.ஆனந்தின் 'மாற்றான்' படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமின்றி, சமூக சேவையிலும் முத்திரை பதித்து வரும் சூர்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். |
0 comments:
Post a Comment