மொராக்கோ நாட்டில் சீர்திருத்தம் கோரி மன்னருக்கு ஆதரவானவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
துனிசியா, எகிப்து, சிரியா, லிபியாவைத் தொடர்ந்து மொராக்கோ நாட்டிலும் 47 ஆண்டு கால ஆட்சியில் இருக்கும் மன்னர் முகம்மதுவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டு மன்னரின் அதிகாரம் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் பறிக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரத்தை மன்னர் பகிர்ந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் "பெப்பிரவரி 20 இயக்கம்" என்ற பெயரில் செயல்பட்டு வரும் மன்னருக்கு எதிரானவர்கள் தொடர்ந்து சீர்திருத்தம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான காசாபிளாங்காவில் மன்னருக்கு எதிரானவர்கள், சீர்திருத்தம் கோருவோர் என ஆயிரக்கணக்கில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.
தலைநகர் ரபாத்தில் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இருதரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொராக்கோவில் மன்னருக்கு பெரிய அளவில் மக்கள் மதிப்பளிப்பதால் மற்ற அரபு நாடுகளைப் போல பெரிய அளவில் கிளர்ச்சி வெடிக்கவில்லை.
மொராக்கோ நாட்டில் சீர்திருத்தம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment