சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்புக்குத் தலைவராக பொறுப் பேற்றுள்ள அல் ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தான் உளவுத் துறை உறுதி அளித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு அளிக்கவிருந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
இதைப் பெறுவதற்காக கடந்த வாரம் அமெரிக்காவுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் சுஜா பாஷா, அல்கொய்தா அமைப்புக்கு புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அல் ஜவாஹிரியைக் கொல்ல அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கடந்த மே 2ம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாத ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இருக்குமிடம் தெரியவில்லை.
இந்நிலையில் இவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தால் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து ஜவாஹிரியைக் கொல்வோம் என்று சுஜா பாஷா தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு அய்மன் அல் ஜவாஹிரியும், பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத்தும் சந்தித்துப் பேசிய விடயம் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.க்கு தெரியும் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
2008ம் ஆண்டு முற்பாதியில் நிகழ்ந்த இந்த சந்திப்புக்கு பிறகு இவர்கள் பற்றிய தகவல் எதுவும் ஐ.எஸ்.ஐ.க்கு கிடைக்கவில்லை. ஆனால் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் மெஹ்சூத் கொல்லப்பட்டார்.
இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய விவரத்தை ஐ.எஸ்.ஐ அமைப்பு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் தெரிவித்ததாக "டிரிபியூன்" நாளேடு இப்போது செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களிரின் சந்திப்பு தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் நடைபெற்றதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு முன்பு வரை அமெரிக்காவின் தாக்குதல் இலக்கில் மெஹ்சூஸ் இடம்பெறவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பை ஒரு பொருட்டாகவே அமெரிக்கா கருதவில்லை.
அல்கொய்தா அமைப்பின் தலைவரை சந்தித்துப் பேசிய பிறகு தான் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்ததாக அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புத்துறைச் செயலராக பழங்குடியினப் பகுதிகளில் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆட்சியின் போது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தான் பணியாற்றினர். அந்த வகையில் வஜிரிஸ்தான் பகுதியிலிருந்த பிரிகேடியர் மக்மூத் ஷா, இவ்விரு தலைவர்கள் சந்திப்பு குறித்து முன்னரே தகவல் தெரிவித்திருந்தார். 2008 ம் ஆண்டுக்குப் பிறகுதான் மெஹ்சூத் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
அல் ஜவாஹிரியை கொலை செய்ய நிச்சயம் உதவி செய்வோம்: பாகிஸ்தான் உளவுத்துறை உறுதி
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment