தங்களது வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இளவரச தம்பதி லண்டனிலுள்ள கென்சிங்ரன் அரண்மனையிலுள்ள தங்களது முதலாவது அலுவலகக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்தக் கட்டடம் பிரான்சின் வேர்செய்ல்ஸ் கட்டடத்தைப் போல பிரம்மாண்டமான பரப்பைக் கொண்டதல்ல. இதில் ஒரு குளியலறையும் இரு படுக்கையறைகளும் மட்டுமே உள்ளன.
இவர்கள் முன்பு அன்றூசில் கல்லூரி நண்பர்களாயிருந்த காலப்பகுதியில் பயன்படுத்திய சிறிய வீட்டைவிடச் சற்றுப் பெரிதாகவே கென்சிங்ரன் அரண்மனை இருந்தது. இது 17ம் நூற்றாண்டிலிருந்து அரச குடும்பத்தினரின் பாவனையிலிருந்து வந்தது.
மேலும் இளவரசி டயானா 1981 இலிருந்து 1997 இல் அவர் இறக்கும் வரை பயன்படுத்திய மாளிகையாகவும் இதுவே இருந்தது. அவர் இறந்த போது இந்த அரண்மனையின் வாயிலில் தான் ஆயிரக்கணக்கானோர் பூக்களைக் குவியல் குவியலாகக் குவித்திருந்தனர்.

இதிலுள்ள பகிடியான விடயம் என்னவெனில் 600 அறைகளும் அதற்கென்றேயான தனித்த காவல்துறைப் பிரிவும் பக்கிங்காம் அரண்மனையில் இருந்தும் இவர்கள் வேறிடங்களில் தங்கியது தான்.
கடந்த வாரம் வில்லியமும் கேற்றும் புதிய கென்சிங்ரன் வீட்டிற்கு வர இரு நாட்கள் எடுத்தன. இப்போது அவர்கள் வடக்கு வேல்சிலுள்ள அங்கிள்சேயில்(Anglesey) உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இங்கு தான் இளவரசர் றோயல் வான்படையின் தேடுதல் மற்றும் மீட்பு உலங்குவானூர்தியின் விமானியாகப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment