லிபிய தலைநகரில் நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல்

Monday, July 25, 2011

லிபியாவில் அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தனக்கு எதிராக போராடிய மக்கள் மீது கடாபி ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தினார். மக்கள் மீது குண்டு வீசும், கடாபி ஆதரவு ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க நேட்டோ படை களமிறக்கப்பட்டது.
நேட்டோ படை ராணுவத்தினர் மற்றும் அவர்களது நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிகள் பலர் பலியாவதாக லிபியா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நேட்டோ படை கடாபி ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் திரிபோலியில் போர் விமானம் மூலம் குண்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது.
இதில் சர்வதேச மீடியா தங்கியிருந்த ஹொட்டலுக்கு அருகே குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதல் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

0 comments:

IP
Blogger Widgets