திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
அவரை சந்திக்க கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்தும் அதை அமெரிக்கா பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜெய்கார்னே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தலாய்லாமா நோபல் பரிசு பெற்றவர். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மதத் தலைவர். எனவே தான் அவரை அதிபர் ஒபாமா சந்தித்து பேசினார்.
அமெரிக்காவை பொறுத்தவரை திபெத் சீனாவின் ஒரு பகுதி தான். அதன் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
அதே நேரத்தில் திபெத் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
மேலும் அவர் கூறும் போது தலாய்லாமா பிரதிநிதிகளுடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் நீண்டநாள் பிரச்சினையை தீர்த்து கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா கருதுவதாகவும் தெரிவித்தார்.
திபெத்தும் சீனாவின் ஒரு பகுதி தான்: அமெரிக்கா
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment