எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது விமானம் விழுந்து விபத்து

Wednesday, July 20, 2011

பாகிஸ்தானின் கராச்சியில் சிறியரக விமானம் ஒன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கராச்சியின் கோரங்கி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மோதுவதற்கு முன்பு தாழ்வான உயரத்தில் அந்த விமானம் பறந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அந்த விமானம் விமானி இல்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் விமானம் என்று  பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன.
அந்த விமானம் பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடித் தகவல் இல்லை.

0 comments:

IP
Blogger Widgets