ஒசாமா பின்லேடன் கொலையில் சதிச்செயல் இல்லை, இது பாகிஸ்தான் தற்போதைய அரசின் கவனக்குறைவால் தான் நடந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் கூறியுள்ளார்.
அதிபர் பதவியிலிருந்து விலகிய முஷாரப் 2008-ல் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முஷாரப்(67) வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: பாகிஸ்தானில் கடந்த மே மாதம் பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.
இதில் சதிச்செயல் இருந்ததாக கருதவில்லை. மாறாக பாகிஸ்தானின் தற்போதைய அரசின் கவனக்குறைவே காரணம். இதன் பிறகும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உறவினை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனது ஆட்சி காலத்தில்(1999-2008) அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தது. அப்போதைய அதிபர் புஷ்சுடன் நான் நல்லுறவினை ஏற்படுத்தியிருந்தேன். தற்போது பாகி்ஸ்தானில் பலவீனமான அரசு உள்ளது.
விரைவில் பாகிஸ்தான் திரும்ப உள்ளேன். வரும் 2013ம் ஆண்டு அங்கு நடைபெறவுளள தேர்தலில் எனது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி போட்டியிடும்.
மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அமெரிக்காவுடனான உறவினை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் அணு ஆயுதம் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது நிலைமையை பரிசீலிக்க வேண்டும்.
பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது அரசின் கவனக்குறைவே: முஷாரப்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment