இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெங்குளூ என்ற நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் 175 கி.மீ தூரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.6 என பதிவான இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மேலும் சிலி நாட்டின் துறைமுக நகரமான வல்பாரைசோவிலிருந்து தென்மேற்கு திசையில் 94 கி.மீ தொலைவில் தலைநகர் சாண்டியாகோவின் மேற்கு திசையில் 136 கி.மீ தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment