இங்கிலாந்து மருத்துவமனையில் மேலும் இருவர் மரணம்: மருத்துவ தாதியிடம் விசாரணை

Sunday, July 24, 2011

பிரிட்டன் ஸ்டாக்போர்ட் மருத்துவமனையில் மேலும் 2 நோயாளிகள் மரணம் அடைந்தனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் மரணம் தொடர்கிறது.

நேற்று காலை 84 வயதுடைய நோயாளி டெரிக் வீவரும் 84 வயது பெண் ஒருவரும் மரணம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இதே மருத்துவமனையில் ஏற்கனவே மூன்று நோயாளிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 நோயாளிகள் இறந்துள்ளனர்.
நோயாளிகள் தொடர் மரணம் தொடர்பாக 27 வயது மருத்துவ தாதி ரெபக்சா கைது செய்யப்பட்டார். அவரிடம் கூடுதல் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவரை தொடர்ந்து காவலில் வைக்க கைது வாரண்ட் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த ஜுலை மாதம் 7ம் திகதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 14 நோயாளிகளில் 5 பேர் இதுவரை இறந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட முறையை பொலிசார் கண்காணித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் 41 வயது நபர் அபாய நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அனுபவம் வாய்ந்த மருத்துவ தாதி மான்செஸ் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் ஆய்வு செய்த போது 36 குளுக்கோஸ் பாட்டிலில் இன்சுலின் கலந்து இருப்பது தெரியவந்தது.

0 comments:

IP
Blogger Widgets