ஏமனில் 2 முக்கிய அல்கொய்தா தலைவர்கள் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் முன்னோர்கள் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர் அமெரிக்கப் படையினரால் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாலும், அல்கொய்தாவினர் பல நாடுகளில் இன்னும் செயல்பட்டு வருகின்றனர்.
அங்குள்ள அப்யான் மாகாணத்தில் ஜிஞ்ஜிபார் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த இடத்தை அவர்கள் செவ்வாய்க்கிழமை சுற்றி வளைத்தனர். அவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை புதன்கிழமை வரை நீடித்தது.
இதில் ஆயாத் அல்-சபாவானி, ஆவாத் முகமது சலே அல்-சபாவானி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆயாத் அல்-சபாவானி, ஆவாத் முகமது சலே அல்-சபாவானி ஆகிய இருவரும் அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்கள் என ராணுவத்தினர் கூறினர்.
அல்கொய்தா இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் ஏமனில் சுட்டுக் கொலை
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment