அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் டொக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ”காதலிக்க நேரமில்லை” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுக படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்த படத்தில் வந்த "விஸ்வநாதன் வேலை வேண்டும்" , "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா" உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.
"காதலிக்க நேரமில்லை" படத்திற்கு நிறைய படங்களில் நடித்தார் ரவிச்சந்திரன். குறிப்பாக இவர் நடித்த "அதே கண்கள்", "இதய கமலம்", "கெளரி கல்யாணம்", "குமரிப்பெண்", "உத்தரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரனும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். ரவிச்சந்திரன் ஸ்டைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின.
நாயகர்கள் நடித்த காலம் போய், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்வு கிடைத்தது. அந்த படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரவிச்சந்திரன்.
சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டொக்டர்கள், ரவிச்சந்திரனுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டொக்டர்கள் சிசிச்சை அளிக்கின்றனர்.
செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டொக்டர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து டொக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். |
0 comments:
Post a Comment