ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் தம்பி கொலை செய்யப்பட்டதால் தெற்கு ஆப்கானிஸ்தானில் பதட்ட நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஹெல்மான்ட் பகுதியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வர கடுமையாக போராடுகிறார்கள்.
சான்கின் பகுதியில் தலிபான்கள் ஆதிக்கம் உள்ளது. மலை மற்றும் கடுமையான காடு பகுதி உள்ள அந்த பகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆண்டு வரை 100 பிரிட்டன் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர்கள் உயிரிந்த எண்ணிக்கையில் 3ல் ஒரு பங்கு வீரர்கள் சான்கின் மாவட்ட பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் வீரர்கள் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அமெரிக்க கடல் சார் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமது வாலி கர்சாய் கொல்லப்பட்டார். அவரது சொந்த பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாலி கர்சாய் மாகாண கவுன்சிலின் தலைவராக இருந்தார். அவரது பாதுகாப்பு பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் கூட்டுப்படைகளுக்கு குறிப்பாக அமெரிக்க துருப்புகளுக்கு பெரும் சிரமத்தை தந்துள்ளது.
ஆப்கன் ஜனாதிபதியின் சகோதரர் சுட்டுக் கொலை: அமெரிக்க வீரர்களுக்கு பிரச்சனை
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment