லிபியாவில் அதிபர் பதவியில் இருந்து பதவி விலக கர்னல் கடாபி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று செய்தி வெளியானது.
41 ஆண்டு காலம் ஆட்சி செய்து வரும் கடாபி பதவி விலகுவது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என தற்போது கடாபி அறிவித்து உள்ளார்.
தீர்ப்பு தினம் வரும் வரை எனக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை இருக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தனது சொந்த நகரமான சிர்தேவில் பல ஆயிரம் ஆதரவாளர்கள் மத்தியில் கடாபி இவ்வாறு முழங்கினார். போராட்டக்காரர்களுக்கு லிபிய மக்கள் பதிலடி தருவார்கள் என்றும் கடாபி தெரிவித்தார்.
லிபியாவில் பெப்பிரவரி 14ம் திகதி முதல் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களத்தில் உள்ளன. கடல் பகுதி நகரமான சிர்தேவில் கடாபி ஆதரவாளர்கள் பச்சை நிற தொப்பியை தலையில் அணிந்து இருந்தனர். குழந்தைகள் முகத்தில் கடாபிக்கு ஆதரவான வார்த்தைகளும் எழுதப்பட்டு இருந்தன.
கடாபி பதவியை துறந்தால் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம் என பிரான்ஸ் கூறிவருகிறது. கடாபி பதவி விலக வேண்டும் என அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
பதவி விலகுவது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: கடாபி
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment