இலங்கை கிரிக்கட் வாரியத்தில் ஊழலும் அரசியலும் தலை விரித்தாடுகிறது என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தும் தரப்பில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் அர்ஜூன ரணதுங்க இணைந்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் வாரியத்திற்கு இடைக்கால கொமிட்டியை அரசு நியமிப்பதை நிறுத்த வேண்டும் என ரணதுங்க கொழும்புவில் இதர உறுப்பினர்களுடன் நேற்று புகார் மனு அளித்தார். அர்ஜூன ரணதுங்க தற்போது எதிர்கட்சி எம்.பி.யாக உள்ளார்.
இலங்கை கிரிக்கட் வாரிய நிர்வாகிகள் ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகளால் இலங்கை கிரிக்கட்டை சீரழித்து விட்டனர். இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கட் போட்டியை நடத்திய பின்னர், இலங்கை கிரிக்கட்டுக்கு 690 டொலர் கடன் ஏற்பட்டுள்ளது. கிரிக்கட்டை இலங்கை அரசு அரசியல் ஆக்கிவிட்டது என ரணதுங்க குற்றம் சாட்டினார்.
விளையாட்டு அமைப்புகளை நிர்வாகம் செய்ய இடைக்கால கொமிட்டிகள் அமைப்பது இலங்கை அரசுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இலங்கை கிரிக்கட் மோசமான சூழலில் உள்ளது. அதனை காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை கிரிக்கட் வாரியத்தில் ஊழல் - அரசியல் தலையீடு: ரணதுங்க ஆவேசம்
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment