சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) உரிய முறையில் தனது பணியை செய்துள்ளதா என்று எனக்கு தெரியவில்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.
கடந்த ஐ.சி.சி.யிடம் கிரிக்கட் சூதாட்டக்காரர்கள் 56 வீரர்களை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 2009 ம் ஆண்டில் 5 வீரர்கள் தங்களை பந்தய சூதாட்டகாரர்கள் தான் அணுகினர் என ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.
கிரிக்கட்டில் வெளிப்படையான அணுகுமுறை தேவை. வீரர்கள் உண்மை கண்டறியும் சோதனை தேவை என்றும் இந்த 46 வயது வீரர் உறுதியாக தெரிவித்தார். ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு ஐ.சி.சி.யில் உள்ளது. அந்த பிரிவிடம் சர்வதேசத்திற்கு உரிய நடமாட்ட அணுகுமுறைகளை வீரர்கள் புகார் தெரிவிக்கலாம். அந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும் வாக் தெரிவித்தார்.
ஸ்டீவ் வாக் அவுஸ்திரேலிய அணிக்கு இறுதியாக 2004 ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆடினார். தற்போது முறைகேடான பந்தய சூதாட்டத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஊழலில் எந்த கப்டனுக்காவது தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டால் அந்த வீரருக்கு ஆயுள் முழுவதும் கிரிக்கட் ஆட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.சி.சி. பணி சரியாக உள்ளதா?: ஸ்டீவ் வாக் கேள்வி
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment