சண்டே மிர்ரர் பத்திரிகை செய்தி அறையில் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருட்டு

Monday, July 25, 2011

சண்டே மிர்ரர் பத்திரிகையிலும் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் பிரபல நட்சத்திரங்கள், தலைவர்கள் கைகளில் போன் வைத்துக் கொள்ளவே அஞ்சுகிறார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு செய்தியும் பெரிய பத்திரிக்கைள் திருடி பரபரப்பு செய்திகளை வெளியிட்டு விடுகிறார்கள்.
இந்த தொலைபேசி தகவல் திருட்டு பிரச்சனையில் சிக்கிக் கொண்ட முர்டோக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை கடந்த 10ந் திகதி மூடப்பட்டது. 168 ஆண்டுகள் சிறப்பாக ஓடிய அந்த பத்திரிகை தொலைபேசி தகவல் குற்றச்சாட்டால் மூடப்பட்டது.
இந்த நிலையில் பிரிட்டனில் தகவல் திருட்டு குறித்த விவாதம் கடுமையாக விவாதிப்படுகிறது. பி.பி.சி நியூஸ் நைட் நிகழ்ச்சியில் தொலைபேசி தகவல் திருட்டு குறித்து காரசாரமாக பேசப்பட்டது.
அப்போது சண்டே மிர்ரர் பத்திரிகை அறையில் பிரபலங்களின் தொலைபேசி தகவல் திருட்டு குறித்து கண்காணிக்கப்பட்டது குறித்தும் விவரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் இருக்கும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
பிரிட்டன் திரைப்பட நட்சத்திரம் லிஸ் ஹர்ட்லி மற்றும் கால்பந்து வீரர் ரியோ பெர்டினன்ட் ஆகியோர் பற்றி பரபரப்பு தகவல் வெளியிட பிரிட்டன் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டின. அப்போது லியின் போன் தகவல் சண்டே மிர்ரர் பத்திரிகை அறையில் கண்காணிக்கப்பட்டதையும் ஒரு செய்தியாளர் நிகழ்ச்சியில் கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets