யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது: ஏங்கலா மார்கெல்

Monday, July 25, 2011

யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்தே பார்க்க முடியாது என ஜேர்மன் அதிபர் ஏங்கலா மார்கெல் கூறினார்.

அதிபர் ஏங்கலா தலைநகர் பெர்லினில் வருடாந்த செய்தியாளர்கள் சந்திப்பை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அவர் கூறுகையில்,"யூரோ என்பது ஐரோப்பாவை விட்டு பிரிக்க முடியாத ஒன்று. யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது" என்றார்.
சர்ச்சைக்குரிய பீரங்கி ஏற்றுமதி சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டது குறித்து அவர் கூறுகையில்,"பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் மனித உரிமை மற்றும் ஜனநாயக மதிப்புகளையும் மேம்படுத்த வேண்டி உள்ளது. எனவே சவுதி அரேபியாவிற்கு 200 பீரங்கிகள் ஏற்றுமதி நியாயமானது தான்" என்றார்.
அரபு நாடுகளில் மக்கள் போராட்டம் ஏற்பட்டு வரும் நிலையில் ஆயுத ஏற்றுமதியை ஜேர்மனி மேற்கொள்வது சரியல்ல என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பா நாடுகளில் ஒன்றான கிறீஸ் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டு கடன் பிரச்சினையில் உரிய பங்கெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வருகிற 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதையும் அவர் தெரிவித்தார். தமது பதவியை நேசிப்பதாக கூறிய அவர் இந்த சூழ்நிலை மாற விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets