மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுகிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.இதனை எதிர்வு கூறியுள்ளவர் "ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்" இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.
வேற்றுகிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டுபிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 சதவீதம் பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டுபிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.
வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2031ல் வேற்றுகிரக வாசிகளை சந்திக்கலாம்: ரஷ்ய விஞ்ஞானி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment