கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 700 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.
ஒவ்வொரு வினாடிக்கும் 5 குழந்தைகள் பிறக்கின்றன. ஆண்டுதோறும் உலக அளவில் 780 லட்சம் மக்கள் உலக சமூகத்தில் இடம் பெற்று வருகிறார்கள்.
1800ஆம் ஆண்டு காலகட்டத்தில் 100 கோடிக்கும் குறைவாக உலக மக்கள் தொகை இருந்தது. 1960ம் ஆண்டு காலகட்டத்தில் 300 கோடியாக மக்கள் தொகை அதிகரித்தது.
1999ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்தது. 2025ம் ஆண்டு காலகட்டத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டு உள்ளது.
உலகில் மிக வறுமையில் வாடும் நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 800 லட்சம் மக்கள் உலக மக்கள் தொகையில் அதிகரிப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment