கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பஞ்சத்திற்கு தீர்வு காண்பதற்காக ஐ.நா சபையின் அவசரக்கூட்டம் வரும் 25ம் திகதி நடைபெறுகிறது.
கென்யா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. சோமாலியா நாட்டின் உள்நாட்டு சண்டையால் அங்கு 20 ஆண்டுகளாக பஞ்சம் நிலவுகிறது.
37 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஒரு வேளை உணவு கூட கிடைக்காத காரணத்தால் அவர்கள் அண்டை நாடுகளான கென்யா மற்றும் எத்தியோப்பாவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.
ஏற்கனவே அந்த நாடுகளும் பஞ்சத்தில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் வெளிநாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன. தற்போது நிலைமை மோசமடைந்துள்ளதால் வெளிநாட்டு உதவிகள் ஏற்கப்படுகின்றன.
ஆக்ஸ்பாம் தொண்டு அமைப்பு கிழக்கு ஆப்ரிக்க மக்கள் வறுமையில் சாவதை ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயத்தில் அக்கறை செலுத்த பிரான்ஸ் முன்வந்துள்ளது.
3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகள் தற்போது இந்நாடுகளுக்கு தேவைப்படுவதால் இது குறித்து பேச ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளின் அவசர கூட்டம் வரும் 25ம் திகதி ரோம் நகரில் நடைபெற உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் பஞ்சம்: ஐ.நா அவசர கூட்டம்
Friday, July 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment