பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

Friday, July 22, 2011

லிபியா தலைவர் கடாபியை விரட்டுவதற்காக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடம் இருந்து கூடுதலாக ஆயுதங்கள் வாங்க கிளர்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

லிபியா தலைவர் கடாபியை எதிர்த்து அந்நாட்டில் கிளர்ச்சி நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு நேட்டோ படை ஆயுதம் மற்றும் விமான வழி ஆதரவு அளித்து வருகிறது.
அடுத்த மாதம் வரும் ரம்ஜானுக்கு முன்பாக கடாபியை விரட்டி விட்டு நாட்டை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் விரும்புகின்றனர். இதற்கு கூடுதலாக ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
நேட்டோ படையில் உள்ள பிரான்ஸ் நாடு லிபியா நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு முதல் முதலாக அங்கீகாரம் அளித்ததும் பிரான்ஸ் தான்.
ஏற்கனவே திரிபோலி நகரின் தென்மேற்கே உள்ள நபூசா மலைப்பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு பிரான்ஸ் ஆயுதம் வழங்கி உள்ளது. எனவே கூடுதல் ஆயுங்களை தற்போதும் பிரான்ஸ் வழங்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் விரும்புகின்றனர்.
இதற்காக நேற்று முன்தினம் பாரிஸ் சென்ற கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் அகமது ஹசீம், ராம்தான் ஜர்முக், சுலைமான் போர்ட்டியா மற்றும் பிராஹிம் பிடல்மால் ஆகியோர் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிடம் கூடுதல் ஆயுதங்கள் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதேபோல் கூடுதல் ஆயுதங்களைப் பெற நேற்று ஸ்பெயின் சென்ற கிளர்ச்சியாளர்களின் தலைவர் மஹ்மூத் ஜிப்ரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிரினிடாட் ஜிமேனசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிளர்ச்சியாளர்களின் தலைவர்களில் ஒருவரான சுலைமான் போர்ட்டியா இதுகுறித்து கூறுகையில்,"எங்களுக்கு சிறிய அளவில் செய்யப்படும் உதவி திரிபோலியை மிக விரைவில் பிடிக்க உதவும். எங்கள் பணிகளை எப்படி எளிதாக செய்யலாம் என்பது குறித்து தற்போது விவாதித்து வருகிறோம்" என்றார்.

0 comments:

IP
Blogger Widgets