இந்திய அணியின் கப்டன் டோனி களத்தில் போராட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர் என இங்கிலாந்து அணி முன்னாள் கப்டன் மைக்கல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக்கல் வாகன் கூறியது, இங்கிலாந்து கப்டன் ஸ்டிராஸ் எப்போதும் தற்காப்பு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதால் இவரை தற்காப்பு கப்டன் என அழைக்கலாம். இவருடைய தலைமையில் இங்கிலாந்து அணி முதல்தர அணியாக வர முடியும்.
இந்திய கப்டன் டோனி, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். இதுதான் இவர் கப்டன் பதவியை சிறப்பாக நிர்வகிப்பதற்கு காரணம். கடினமாக போராடும் குணம் தான் இவரது சிறப்பு. இதனால் இவரை சிறந்த போராட்டக்காரர் என்றே அழைக்கலாம்.
களத்தில் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி, அவர்களது முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து, இதன்மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர். இத்தொடரில், இரண்டு கப்டன்களில் யார் அதிக தைரியத்துடன் போட்டியை அணுகுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு.
மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளதால் அதிகபட்சமான ஸ்கோரை பதிவு செய்யலாம். முக்கியமான நேரங்களில் ஏற்படும் நெருக்கடியை, எந்த கப்டன் சிறப்பாக சமாளிக்கின்றாரோ, அவரது அணி தான் வெற்றி பெறும் என்று மைக்கல் வாகன் தெரிவித்தார்.
கடினமாக போராடும் குணம் தான் டோனியின் சிறப்பு: மைக்கல் வாகன் புகழாரம்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment