சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிளர்ச்சியால் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிரான்சு நாடு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்நாட்டு அதிபருக்கு அளித்து வந்த பயங்கர ஆதரவை கத்தார் நாடு சமீபத்தில் வாபஸ் பெற்றதுடன் சிரியா தலைநகர் டமாஸ்கசில் இருந்த தூதரகத்தையும் மூடியது.
இதையடுத்து சிரிய நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஆலோசித்து வருகிறது.
சிரியா மீது பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் ஆலோசனை
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment