நிதியுதவி நிறுத்தப்பட்டதால் ஆட்குறைப்பில் ஈடுபடும் பி.பி.சி

Wednesday, July 20, 2011

உலகம் முழுவதும் செய்திகளை தரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பி.பி.சி செய்தி நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணியில் இருந்து குறைக்க முடிவு செய்துள்ளது.

தற்போது இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களில் சுமார் 100 பேர்கள் வரையில் நீக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"அரசு அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் சுமார் 650 பணியிடங்களை குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நிறுவனம் உள்ளாகியுள்ளது" என்றார்.
மேலும் வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் நிதி நிலையில் 16 சதவீதம் வரையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets