பொய்ப் பிரசாரங்களைத் தோற்கடித்த தேர்தல் முடிவுகள்!

Monday, July 25, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்
மக்களைக் குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் யாவும் பொய்யானவை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மக்களின் இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் பலனடைவதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தாலும் வடபகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிங்கள கட்சியில் தேர்தலில் நிற்பதாக இனவெறியூட்டி எமக்கு எதிராகத் திருப்பப்பட்டன. மக்களின் வாக்குகள் வன்னிப் போருக்காக சிங்கள அரசை பழிவாங்க எமக்குப் பாடம் புகட்டுமாறு எமது மக்கள் உணர்வூட்டப்பட்டனர் என்றும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்  அனைத்து சமூகங்களும் அமைதியாக சுதந்திரமாக வாழும் சூழலில் எமது மக்களுக்கான உதவிகளைச் செய்வதற்கே நாம் விரும்புகிறோம். ஆனால் கடும்போக்கான அரசியல்வாதிகள் சிலர் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
எனினும்  சில யதார்த்த அரசியல்வாதிகள் ஏனைய இன மக்களை தமிழ் மக்களின் எதிரிகளாக்க அனுமதிக்கவில்லை. தமிழினத்தவர்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையே நாம் முன்னெடுத்துள்ளோம்.
தேர்தல் பிரசார வேலைகளில் எமக்கு உதவ வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பிரதமர் டி. மு. ஜயரட்ண  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய அமைச்சர்களும் மோசடி செய்து எம்மை வெல்லவைக்கவே வந்ததாக ஒரு பிம்பம் எதிர்க்கட்சிகளால் காண்பிக்கப் பட்டது.
தேர்தல் தினத்தன்று வாக்குப் பெட்டிகளை திருட அல்லது மாற்ற அரசாங்கம் திட்டமிட்டதாகச் சொல்லப்ப ட்டது. மக்களைக் குழப்புவதற்கான அனைத்து பிரசார முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இப்பிரசாரங்கள் யாவும் பொய்யானவை என்பதை தேர்தல் நடைமுறைகளும்  முடிவுகளும் காட்டியுள்ளன.
உள்ளூராட்சி சபைகளுக்கான ஆட்சி அதிகாரத்தைக் கையளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மக்களுக்கு நாம் ஓர் உண்மையான  நேர்மையான ஊழலற்ற சேவையை வழங்குவோம். அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறிய உள்ளூராட்சி சபைகளில் நாம் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு இயலுமானவரையில் அத்தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவுவோம் என்றும் அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets