அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பெருமிதம்
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கும் துர்பிரசாரங்களுக்கும் ஒரு சிறந்த பதிலாக நடந்து முடிந்த தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நீதியாகவும் அமைதியாகவும் நடைபெற்ற 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 சபைகளின் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியீட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பாராளுமன்ற ஜனநாயக உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக வட பகுதியில் நீதியும் நியாயமுமான பக்கசார்பற்ற தேர்தலை நடத்தியுள்ளது.
வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் அரசாங்க கட்சி இத்தேர்தலில் வெற்றிவாகை சூடியிருக்கிறதென்று தெரிவித்த அமைச்சர் இந்த தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் ஏற்பட்ட படுதோல்வியெனவும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment