மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு அனுமதி!

Monday, July 25, 2011

தேர்தல் முடிவுகள் குறித்து  அமைச்சர் பசில் கருத்து
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதாக அமைகிறது என  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் சிரம் தாழ்த்தி  அமைதியுடன் ஏற்றுக் கொள்வதாகவூம் அவர் குறிப்பிட்டார்
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மக்கள் நாடளாவிய ரீதியில் பெரும்பான்மை பலத்துடன் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை அங்கீகரித்து அதற்கான அனுமதியையூம் வழங்கியுள்ளனர். ஜனாதிபதியின் தலைமையில் செயற்படுத்தப்படும் “திவிநெகும” “கமநெகும”  “மகநெகும” ஆகிய கிராமப்புற உட்கட்டமைப்பு  கல்வி அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் இருப்பது எமக்கு பெரும் தைரியத்தை கொடுத்துள்ளது.
அனுராதபுரம்  பொலன்னறுவை  மொனராகலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மக்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வெற்றிலைக்கு வாக்களித்து எமது கொள்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
வடக்கில் உள்ள மக்களின் தீர்ப்பை நாம் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இன  மத  குல பேதம் இன்றி வடக்கை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி தலைமையில் நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.
வடக்கில் மக்களை தமது பக்கம் ஈர்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனவாத ரீதியில் பிரசாரம் செய்துள்ளமை கவலைக்குரியது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets