கிளிநொச்சியில் சர்வதேச விளையாட்டரங்கிற்கு ஜனாதிபதி அடிக்கல்!

Wednesday, July 20, 2011

325 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கிற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாட்டிவைத்தார்.

கிளிநொச்சி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ஐ. ம. சு. முவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
‘தமிழ் மக்களின் உரி மைகள் அவர்களிடமே இருக்க வேண்டும். அதனை எவரும் தட்டிப் பறித்துக்கொள்ள முடியாது. 30 வருட காலம் தமிழர்கள் இழந்திருந்த உரிமைகளையும் ஜனநாயக த்தையும் பெற்றுக்கொடுத் துள்ளோம்’ என ஜனாதிபதி அங்கு கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets