தேர்தல் இடம்பெற்ற பகுதிகளில் கூட்டங்கள் ஊர்வலங்கள் தடை!

Monday, July 25, 2011

பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்ற பிரதேசங்களில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள் பொதுக் கூட்டங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன்  தெரிவித்தார்.

தேர்தலில் பெற்ற வெற்றியை வன்முறையற்ற நிலையில் அமைதியான முறையில் கொண்டாடுமாறும் சகல வேட்பாளர்களையும்  அவர்களது ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி ஊர்வலங்கள்  பொதுக் கூட்டங்கள் நடத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments:

IP
Blogger Widgets