இன்று நள்ளிரவூக்குப் பின் தேர்தல் பிரசாரங்களுக்கு தடை!

Wednesday, July 20, 2011

65 உள்ளுhராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவூடன் முடிவூக்கு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக கூட்டங்களோஇ பிரசாரங்களோ இன்று நள்ளிரவூ 12 மணிக்குப் பின்னர் நடத்த முடியாது எனத் தெரிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணையாளர்-தேர்தல்கள் தொடர்பான விளம்பரங்கள் யாவூம் இன்று நள்ளிரவூடன் முடிவூக்குக் கொண்டுவரப்படவேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
21- 22- 23 ஆம் திகதிகளில் தேர்தல்கள் தொடர்பான விளம்பரங்களோ அல்லது வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான தகவல்களோ அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிட முடியாது. எனினும்இ இன்று மாலைவரை நடைபெற்ற கூட்டங்கள் தொடர்பான செய்திகளை நாளையதினம் மாத்திரம் ஊடகங்களில் வெளியிடுவதற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் அறிவித்துள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets