முக்கியப் போட்டியில் இங்கிலாந்துடன் முதல் பயிற்சி போட்டியில் ஆடி வரும் இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தசைப்பிடிப்புக்கு ஆளாகியுள்ளார். இதனால் தொடர்ந்து அவரால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாகீர்கானுக்கு ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு இந்திய அணிக்கு அதிர்ச்சிச் செய்தியாக வந்துள்ளது. ஜாகீரைத் தான் இந்திய அணி முழுமையாக நம்பியுள்ளது.
ஆனால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பின் பாதிப்பு முழுமையாக தெரியவில்லை. சற்றுக் கவலைக்குரியதாக இருந்தால் இந்த போட்டி மட்டுமல்லாமல் தொடர் முழுவதுமே அவரால் ஆட முடியாமல் போகக் கூடும்.
ஜாகீரின் காயம் குறித்து அணி பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கூறுகையில்,"இது மிகவும் துரதிர்ஷ்டவமானது. ஜாகீர் பந்து வீச முடியாமல் போனது பேரிழப்பாகவே கருதப்பட வேண்டும். மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தும் நிலையில் அவர் இருந்தபோது வெளியேறியது வருத்தமாக உள்ளது. மிகச் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தார் ஜாகீர்" என்றார்.
மேலும் ஜாகீரின் காயம் குறித்த தன்மையை ஆராய வேண்டும். இரண்டாவது நாள் ஆட்டத் தொடக்கத்தில் தான் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும் எனக் கருதுகிறேன் என்றார்.
ஐாகீர்கானுக்கு தசைப்பிடிப்பு: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment