அட்லாண்டா டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷப் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஜப்பானின் டாட்சுமா இடோவை எதிர்கொண்டார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சோம்தேவ், அமெரிக்காவின் மார்டி பிஷ்சை சந்திக்க உள்ளார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சோம்தேவ், பிலிப்பைன்சின் டிரிட் கான்ராடு ஹுயு ஜோடி, லிதுவேனியாவின் ரிச்சர்டு பிரான்கிஸ், பெல்ஜியத்தின் சேவியர் மாலிசி ஜோடியை சந்தித்தது. இதில் சோம்தேவ்-ஹுயு ஜோடி 6-4, 4-6, 5-10 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.
அட்லாண்டா டென்னிஸ்: காலியிறுதியில் சோம்தேவ்
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment