அப்ரிடி தந்தை மரணம்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அப்ரிடி

Monday, July 25, 2011

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் சையது அப்ரிடியின் தந்தை சகாப்சதா பசாலுர் ரஹ்மான் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பசாலுர் ரஹ்மான் மாரடைப்பு காரணமாக அகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தந்தையின் மரணச்செய்தியை அறிந்து ஹேம்ஷயர் அணிக்காக டி20 போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்ரிடி உடனே நாட்டுக்கு திரும்பினார்.
ஆனால் பசாலுர் ரஹ்மான் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பெமிடி மிர்சா மற்றும் பைசல் கரீம் குந்தி, பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் இஜாட் பட் முதலானோர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets