இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக்போர்ட் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்ச் கிப்(84), லான் செஸ்டர்(71), டிரேசி ஆடன்(44) ஆகியோர் திடீரென மரணம் அடைந்தனர்.
இவர்கள் நோய் தாக்கம் காரணமாக உயிர் இழக்கவில்லை. அதிக வீரியம் கொண்ட மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
எனவே இதுபற்றி பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ரெபேக்கா லிங்ஸ்டன் என்ற தாதி 3 பேரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் பாட்டிலில் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் ஏற்றி 3 பேரையும் அவர் கொலை செய்துள்ளார்.
இதேபோல் மேலும் 12 பேருக்கு அவர் குளுக்கோசில் இன்சுலின் மருந்தை செலுத்தி இருந்தார். ஆனால் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர்.
ரெபேக்கா லிங்ஸ்டனை பொலிசார் கைது செய்தனர். மூன்று பேரையும் கொன்றதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியிடவில்லை. அவர் மனவிரக்தியால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் மூன்று நோயாளிகளை கொன்ற மருத்துவ தாதியிடம் விசாரணை
Friday, July 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment