பிரான்சில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் திகதி புரட்சி தினமான பாஸ்டிலே தேசிய விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரான்சில் கடந்த 1789ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பாரிசில் உள்ள பாஸ்டிலே சிறைச்சாலையை புரட்சியாளர்கள் திரண்டு தாக்கினர்.

அந்த கொந்தளிப்பு போராட்டம் பிரான்சில் புரட்சி ஏற்பட வழிவகுத்ததுடன் சுதந்திரமும் பெற்று தந்தது. எனவே ஒவ்வொரு ஆண்டும் பாஸ்டிலே தினம் தேசிய விடுமுறை கொண்டாட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
பிரான்சில் நேற்று பாஸ்டிலே தினம் கொண்டாடப்பட்டது. ராணுவ அணி வகுப்பும் நடைபெற்றது. அனைத்து மக்களும் உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஒருவித பதட்டத்துடனேயே காணப்பட்டார்.
வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஒரு பிரான்ஸ் வீரர் கொல்லப்பட்டார். மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட மறுநாள் இந்த துயர நிகழ்வு ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு நிகோலஸ் சர்கோசி திடீர் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். பாஸ்டிலே தினம் ஆப்கானிஸ்தான் ஓபரேஷனில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு சமர்ப்பணம் என்று அவர் அறிவித்தார்.
நிகோலஸ் சர்கோசி நேற்று பாதுகாப்பு துறையினருடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது ஆப்கானிஸ்தானில் தற்கொலை படையினரால் பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து விவாதித்தார்.
முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிற 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் துருப்புகள் நாடு திரும்புகின்றன. அதற்கு முன்பாக அங்கு பிரான்ஸ் வீரர்களை பாதுகாப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ராணுவ அணிவகுப்புடன் துவங்கிய பாஸ்டிலே தின கொண்டாட்டம்(வீடியோ இணைப்பு)
Monday, July 18, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
3:46 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment